உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் பலி

ப.வேலுார் : ப.வேலுார் அருகே, கூடச்சேரியை சேர்ந்தவர் நடராஜன், 36; சலுான் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை, மது வாங்கிக்கொண்டு, கந்தம்பாளையத்தில் உள்ள சரவணன் என்பவ-ருக்கு சொந்தமான விவசாய கிணற்றின் மீது அமர்ந்து மது குடித்-துள்ளார். போதை தலைக்கேறிய நிலையில், கிணற்றில் தவறி விழுந்து மூழ்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், நடராஜன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி