உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

ஏகாம்பரேஸ்வரருக்கு சிறப்பு பூஜை

ப.வேலுார்: பிரதோஷத்தையொட்டி, ப.வேலுார் எல்லையம்மன் கோவி லில் உள்ள ஏகாம்பரேஸ்வரருக்கு, சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது. நேற்று மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், பன்னீர், தேன், திருநீறு உள்ளிட்ட, 16 வகையான அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. கோவிலில் நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு நடந்தது. தொடர்ந்து, ஏகாம்பரேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ