உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 8 தாலுகாவில் வரும் 13ல் ரேஷன் குறைதீர் முகாம்

8 தாலுகாவில் வரும் 13ல் ரேஷன் குறைதீர் முகாம்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், பொது வினியோக திட்டம் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவிக்கவும், சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், பொது வினியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் நடத்தப்படுகிறது.அதன்படி வரும், 13 காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை, நாமக்கல், ராசிபுரம், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லி-மலை, திருச்செங்கோடு, ப.வேலுார் மற்றும் குமாரபாளையம் தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவல-கத்தில், சம்பந்தப்பட்ட தாசில்தார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் தலைமையில் நடக்கி-றது. பொதுமக்கள், பொது வினியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் தொடர்பான குறைகளை தீர்வு செய்து கொள்-ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை