உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் கோரிக்கை குறித்து 361 மனுக்கள் அளிப்பு

நாமக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் கோரிக்கை குறித்து 361 மனுக்கள் அளிப்பு

நாமக்கல், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில், முதியோர், விதவை மற்றும் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி, பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம், 361 மனுக்கள் வரப்பெற்றன. அவற்றை பெற்றுக்கொண்ட கலெக்டர், பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, 'மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டார். தொடர்ந்து, சென்னை அண்ணாதுரை நுாற்றாண்டு நுாலகத்தில் நடந்த, 58-வது தேசிய நுாலக வார விழாவில், ராசிபுரம் முழுநேர நுாலகத்தின் மூன்றாம் நிலை நுாலகர் விஜயலட்சுமி, 2024-25ம் -ஆண்டிற்கான நல்நுாலகர் விருதான, 'டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன்' விருதும், குமாரபாளையம் வாசகர் வட்ட தலைவர் விடியல் பிரகாஷ், சிறந்த வாசகர் வட்டத்திற்கான நுாலக ஆர்வலர் விருதும் பெற்றனர். அவர்கள், கலெக்டர் துர்கா மூர்த்தியிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும், காளப்பநாயக்கன்பட்டி சமூகநீதி அரசு பள்ளி மாணவர் விடுதியில், காவலர் மற்றும் ஏவலராக பணியாற்றி, பணியின்போது உயிரிழந்தவரின் மனைவிக்கு, சமூகநீதி அரசு கல்லுாரி மாணவியர் விடுதியில், கருணை அடிப்படையில் சமையலர் பணியிடத்திற்கான நியமன ஆணை வழங்கப்பட்டது. டி.ஆர்.ஓ., சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திட்ட இயக்குனர் வடிவேல், ஆர்.டி.ஓ., லெனின் அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ