உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சேந்தையில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேந்தையில் தொடர் மழை இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சேந்தமங்கலம், தமிழகம் முழுவதும், தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி முதல் சேந்தமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. நேற்று காலை, சற்று மழை பெய்வது நின்றவுடன், பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் அவர்களின் அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டனர். இந்நிலையில், காலை, 11:00 மணி முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால், பள்ளிக்கு சென்ற குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி