உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நெல் வயல் வரப்பில் தட்டைப்பயிர் சாகுபடி

நெல் வயல் வரப்பில் தட்டைப்பயிர் சாகுபடி

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில், நெல் வயல்களின் வரப்புகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் உள்ளன. இந்த பூச்சிகள் நெல் பயிரில் உள்ள பச்சையத்தை உறிஞ்சி விடுவதால் சில நாட்களில் நெல் பயிர் வாடி விடுகிறது.இதை தடுப்பது குறித்து, நாமகிரிப்பேட்டை வேளாண்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நெல் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் காணப்படுகின்றன. இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்த முடியும். நெல் வயலின் வரப்பு ஓரத்தில் தட்டைப்பயிறு விதைக்கலாம். தட்டைப்பயிரில் நெற்பயிரை தாக்காத அசுவினிகள் உற்பத்தியாகும். இந்த அசிவினிகளால் பொறிவண்டுகள் கவரப்பட்டு அப்பகுதிக்கு வரும். இவைகள், நெற்பயிரில் உள்ள சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும். எனவே, நெல் வயல் வரப்புகளில் தட்டைப்பயிர் நடுவது அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை