உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மானியத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

மானியத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம் தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல், 'மானியத்தில் நாட்டினக் கோழி வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற, தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, நாட்டின கோழி வளர்ப்பு தொழிலை பெண்கள் மேற்கொள்ள, 2024-25ல், 50 சதவீதம் மானியத்தில், ஒரு பயனாளிக்கு, 40 கோழிக்குஞ்சுகள் வீதம், தமிழகம் முழுதும், 38,700 பெண்களுக்கு மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும், 100 பயனாளிகள் வீதம், 15 ஒன்றியங்களுக்கு, 1,500 பயனாளிகளுக்கு செயல்படுத்த ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், தாங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி, வரும், 20க்குள் விண்ணப்பம் அளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி, ஏழைப்பெண்ணாக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர் மற்றும் உடல் ஊனமுற்றோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி வளர்ப்பில் ஆர்வம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.பயனாளி சொந்த செலவில், 3,200 ரூபாய் செலவில் கொள்முதல் செய்ய திறன் பெற்றவராக இருக்க வேண்டும். சுயசான்று வழங்கிய ரசீது சமர்ப்பிக்கப்பட்டவுடன், 50 சதவீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்யப்பட்ட சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் பயனாளி, 30 சதவீதம் பேர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை