கரூர், பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், சம்பா நெல் பயிரிகளுக்கு காப்பீடு செய்ய, நவ.,-30 வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது' என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில், நெல், மக்காச்சோளம் பயிர்களும், 2025 ரபி பருவத்தில், நிலக்கடலை, சோளம், கரும்பு பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு அரசாணை வழங்கப்பட்டுள்ளது. இதில், வி.ஏ.ஓ.,வின் நடப்பு சாகுபடி அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள் ஆகியவற்றில் பிரீமிய தொகை செலுத்தலாம்.சிறப்பு பருவ பயிர் காப்பீட்டில், சம்பா நெல் பயிர் ஒரு ஏக்கருக்கு, 570.57 ரூபாய், மக்காச்சோளம் ஒரு ஏக்கருக்கு, 474.24 ரூபாய் காப்பீட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். ரபி பருவ பயிர் காப்பீட்டில், சோளம் பயிர் ஒரு ஏக்கருக்கு, 107.94 ரூபாய், நிலக்கடலை, 492.02 ரூபாய், கரும்பு பயிர் ஒரு ஏக்கருக்கு, 1,304.16 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். நெல் பயிருக்கு காப்பீடு செலுத்த கடைசி நாள் வரும், நவ., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும், மக்காச்சோள பயிருக்கு டிச.,- 2க்குள், ரபி பருவத்தில் சோளம் பயிருக்கு டிச.,- 16க்குள், நிலக்கடலைக்கு, 2026 ஜன.,- 31க்குள், கரும்பு பயிருக்கு 2026 மார்ச்,- 31க்குள் செலுத்த வேண்டும். விபரங்களுக்கு, வட்டார வேளாண் உதவி இயக்குனர், வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர் அல்லது வங்கி கிளைகளையோ அணுகலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.