| ADDED : ஆக 01, 2011 03:47 AM
ப.வேலூர்: விவசாய நிலத்தில் போடப்பட்ட பைப் லைனை உடைத்து சேதப்படுத்திய
இரண்டு பேரை, நல்லூர் போலீஸார் கைது செய்தனர்.ஜமீன் இளம்பிள்ளை,
இ.நல்லாகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள்(40). இவருக்கும்,
அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன் (46) என்பவருக்கும் இடையே பொதுவான கிணறு
உள்ளது. அந்த கிண்றில் இருந்து தண்ணீர் எடுத்து பாய்ச்சுவது சம்பந்தமாக
இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது.இந்நிலையில், கடந்த, 25ம் தேதி
கண்ணம்மாள், தோட்டத்தில் பைப் லைன் போட்டுள்ளார். நேற்று முன்தினம்
பிரபாகரன் உள்ளிட்ட, 10 பேர் கொண்ட கும்பல், அந்த பைப் லைனை உடைத்து
சேதப்படுத்தியுள்ளனர்.இதுகுறித்து கண்ணம்மாள், நல்லூர் போலீஸில் புகார்
செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து, பிரபாகரன் அவரது
மைத்துனர் விஜயகாந்த் (32) ஆகியோரை கைது செய்தனர்.