ராசிபுரம்: மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டியில், ராசிபுரம்
முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர் சாதனை
படைத்துள்ளனர்.சேலம், தாதகாப்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில்,
கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான வலுதூக்கும் போட்டி நடந்தது. போட்டியில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து, 500க்கும் மேற்பட்ட கல்லூரி
மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அதில், முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரியை
சேர்ந்த மாணவர் சக்திவேல், 500 கிலோ எடை பிரிவிலும், மாணவர்கள் சிவபாலன்,
அருண்குமார் ஆகியோர், 470 கிலோ மொத்த எடை பிரிவிலும் வெற்றி பெற்று
முதலிடம் பிடித்தனர்.மாணவர்கள் கார்த்திக், குமரேசன் ஆகியோர், 467.5 கிலோ
மற்றும், 450 கிலோ மொத்த எடையை தூக்கி இரண்டாமிடம் பெற்றனர். மகளிர்
பிரிவில், 210 கிலோ எடை பிரிவில் மாணவியர் கதீஜா, பிரியா, 230 கிலோ மொத்த
எடையை தூக்கி முதலிடமும், மாணவியர் தவமணி, சிவகாமி ஆகியோர், 205 கிலோவும்,
தெய்வத்தாய், 180 கிலோ, தனலட்சுமி, 230 கிலோ, கலைவாணி, 160 கிலோ என மொத்த
எடையை தூக்கி இரண்டாமிடம் பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, கல்லூரி
தாளாளர் ராமசுவாமி, செயலாளர் முத்துவேல், முதல்வர் செல்வகுமரன், மாணவர்
நலன் டீன் ஸ்டெல்லாபேபி, உடற்கல்வி இயக்குனர்கள் ஜெயந்தி, ரமேஷ் ஆகியோர்
பாராட்டினர்.