உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாலை விரிவாக்க பணி தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

சாலை விரிவாக்க பணி தரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு

ராசிபுரம்: -ராசிபுரம் அருகே, சாலை விரிவாக்க பணிகளின் தரம் குறித்து, சேலம் நெடுஞ்சாலைத்துறை தரக்-கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.ராசிபுரம் நெடுஞ்சாலை உட்கோட்டத்தில், ஒருங்-கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 2025--26ன் கீழ் சாலைப்பணிகள் நடந்து முடிந்தன. இதில், வெள்ளை பிள்ளையார் கோவி-லிலிருந்து, அலவாய்ப்பட்டி செல்லும் சாலையில் நடைபெற்று வந்த இடைவழிப் பாதையை இருவழி பாதையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி தற்போது முடிவடைந்-துள்ளது. இப்பணிகளை, சேலம் நெடுஞ்சாலைத்-துறை தரக்கட்டுப்பாடு கோட்ட பொறியாளர் கதிரேஷ் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சாலையின் தடிமன் மற்றும் அகலம் ஆகிய-வற்றை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு தேவை-யான அறிவுரைகளை வழங்கினார்.ஆய்வின்போது ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டு-மானம் மற்றும் பராமரிப்பு உதவிக்கோட்ட பொறி-யாளர் ஜெகதீஸ்குமார், நாமக்கல் தரக்கட்டுப்பாடு உதவி கோட்ட பொறியாளர் தமிழரசி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை