உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / புகையிலை விற்ற வாலிபருக்கு காப்பு

புகையிலை விற்ற வாலிபருக்கு காப்பு

குமாரபாளையம் : குமாரபாளையம் - இடைப்பாடி சாலை, தனியார் மில் அருகே, இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., தங்கவடிவேல் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மஹாராஷ்டிரா பதிவெண் கொண்ட பொலிரோ வாகனம் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்த போது, புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, சோழாப்பூரை சேர்ந்த கணேஷ், 29, என்பவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை