உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காவிரி ஆற்றில் மணல் திருட்டு வருவாய் துறையினர் பறிமுதல்

காவிரி ஆற்றில் மணல் திருட்டு வருவாய் துறையினர் பறிமுதல்

ப.வேலுார்: ப.வேலுார் காவிரி ஆற்றில் இருந்து மணல் திருடி, விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மணலை, வருவாய்த்-துறையினர் பறிமுதல் செய்தனர்.ப.வேலுார் அருகே, நன்செய் இடையாறு பகுதி-களில் உள்ள காவிரி ஆற்றில், இரவு, 11:00 மணி முதல் அதிகாலை, 3:00 மணி வரை மணல் கொள்ளை நடக்கிறது. டூவீலரில் மூட்டை கட்டி நன்செய் இடையாறு பகுதிகளில் மணலை பதுக்கி வைத்து, ப.வேலுார் சுற்றுவட்டார பகுதிக-ளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதுகு-றித்து, அப்பகுதி பொதுமக்கள், ப.வேலுார் போலீ-சாருக்கு பலமுறை புகாரளித்தும், கண்டுகொள்-ளாததால், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர்.நேற்று இரவு, 8:00 மணிக்கு, மோகனுார் தாசில்தார் மதியழகன் தலைமையில், ஆர்.ஐ., ராமசாமி, வி.ஏ.ஓ., உத்திரராஜன், நன்செய் இடை-யாறு வி.ஏ.ஓ., அரவிந்தன் ஆகியோர், நன்செய் இடையாறு பகுதிகளில் சோதனை மேற்கொண்-டனர். அப்போது, நன்செய் இடையாறு, ஈஸ்-வரன் கோவில் அருகே உள்ள தெப்பக்குளம், அதே பகுதியில் உள்ள குமரி அம்மன் கோவில் மற்றும் ராஜா வாய்க்கால் கரையோர பகுதி-களில், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த, 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காவிரி மணலை பறி-முதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை