உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  அவலாஞ்சி சுற்றுலா மையம்; இன்று ஒரு நாள் மட்டும் மூடல்

 அவலாஞ்சி சுற்றுலா மையம்; இன்று ஒரு நாள் மட்டும் மூடல்

ஊட்டி: ஊட்டி எமரால்டு அருகே, அவலாஞ்சி பகுதியில் சுற்றுலா மையம் அமைந்துள்ளது. ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அவலாஞ்சியின் அழகை கண்டுக்களிக்க தவறுவதில்லை. இதனால், இங்கு பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்நிலையில், இப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பவானி அம்மன் கேரவிலில், மார்கழி மாதம் சிறப்பு பூஜை இன்று நடக்கிறது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக, உள்ளூர் மக்களின் வருகை அதிகரிக்கும் என்பதால், இன்று ஒரு நாள் மட்டும், சூழல் சுத்துலா மையம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ