உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  ஆபத்தான மரங்கள்: அகற்றினால் அச்சமில்லை

 ஆபத்தான மரங்கள்: அகற்றினால் அச்சமில்லை

பந்தலுார்: பந்தலுார் அருகே அத்திச்சாலில் ஆபத்தான மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பந்தலுார் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை, அகற்ற வருவாய் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், அத்திச்சால் பழங்குடியின கிராமத்தை ஒட்டிய, குடியிருப்புகள் மற்றும் சாலை அருகே கற்பூர மரங்கள் காய்ந்து,விழும் நிலையில் உள்ளன. இந்த மரங்களை அகற்றாமல் விட்டுள்ளதால் மழை காலத்தில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை