மேலும் செய்திகள்
அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் காத்திருப்பு போராட்டம்
13 hour(s) ago
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
13 hour(s) ago
வடகிழக்கு பருவ மழை எதிரொலி; மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
13 hour(s) ago
குன்னுார்: நீலகிரி மாவட்டம், குன்னுார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதில், குன்னுார் - ஊட்டி சாலையில் பிளாக்பிரிட்ஜ் அருகே மரம் விழுந்தது.பலத்த காற்று வீசியதில், குன்னுார் - மஞ்சூர் சாலை கெந்தளா அருகே, பெரிய அளவிலான கற்பூர மரம் விழுந்தது.தகவலின்படி, குன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் மேற்பார்வையில் தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். இதனால், இரு சாலைகளிலும் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே மாநில எல்லையில் சுல்தான் பத்தேரி, மற்றும் கர்நாடக மாநிலம் குண்டல்பேட் செல்லும் நெடுஞ்சாலையில், பாட்டவயல் சோதனைச் சாவடி அருகே பெரிய மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது.இதனால், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்கள் இடையே வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சுல்தான் பத்தேரி தீயணைப்பு துறையினர் மற்றும் கேரளா வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, மரத்தை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, மூன்று மணி நேரத்துக்கு பின் போக்குவரத்து சீரானது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago