உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஊருணியில் மூழ்கி குழந்தை பலி

ஊருணியில் மூழ்கி குழந்தை பலி

பரமக்குடி:-ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முதலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன் மனைவி சாவித்திரி. இவர் நேற்று மாலை 6:00 மணிக்கு தனது 3 வயது பெண் குழந்தை இதலிகாவுடன், அப்பகுதியில் உள்ள ஆலமரத்தடி ஊருணியில் குளிக்க சென்றார். அங்கு குளித்த நிலையில் திடீரென குழந்தையை காணாமல் தேடினார். அப்போது தான் குழந்தை ஊருணியில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. சத்திரக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ