உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாலத்தில் தடுப்புசுவர் சேதம்; விபத்து அச்சத்தில் மக்கள்

பாலத்தில் தடுப்புசுவர் சேதம்; விபத்து அச்சத்தில் மக்கள்

கமுதி : கமுதி அருகே சின்ன ஆனையூர் கிராமத்திற்கு செல்லும் ரோட்டில் உள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் சேதமடைந்து ஆபத்தான நிலையில் இருப்பதால் கிராம மக்கள் அச்சப்படுகின்றனர்.சின்ன ஆனையூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கமுதி-- முதுகுளத்துார் சாலை பேரையூர் அருகே ஆனையூர் முக்கு ரோட்டில் இருந்து 2 கி.மீ., தொலைவில் சின்ன ஆனையூர் உள்ளது. இவ்வழியில் வரத்து கால்வாய் இருப்பதால் தண்ணீர் செல்லும் போது கிராம மக்கள் கடந்து செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. பின்பு முறையாக மராமத்து பணி செய்யப்படவில்லை.தற்போது பாலத்தின் தடுப்புச்சுவர்​ இடிந்து விழுந்து சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.பாலம் விரிசலடைந்து இருப்பதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்லும் போது விபத்தில் சிக்கும்​ நிலை உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இவ்வழியில் செல்லாமல் கிராம மக்கள் 5 கி.மீ., சுற்றி செல்லும் அவல நிலை உள்ளது.எனவே சின்ன ஆனையூர் கிராமத்திற்கு செல்லும் பாலத்தை மராமத்து பணி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை