உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமநாதபுரத்தில் ஐந்து மையங்களில்  2229 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர் 

ராமநாதபுரத்தில் ஐந்து மையங்களில்  2229 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர் 

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்டத்தில் ஐந்ததேர்வு மையங்களில் 2229 பேர் இன்று(மே 5) நீட் தேர்வு எழுதுகின் றனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் அச்சுந்தன்வயல் பகுதியில் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரிவளாகத்தில் 912 பேரும், தேவிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளவேலுமனோகரன் பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் 504 பேரும், ராமநாதபுரம்கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முகமது சதக் கபீர் பப்ளிக் பள்ளி வளாகத்தில் 312 பேர் எழுதுகின்றனர்.தேவிபட்டினம் ரோடு வெண்குளம் பகுதியில் உள்ள ஷிபான் நுார் குளோபல் அகாடமி வளாகத்தில்192 பேரும், தேவிபட்டினம் ரோடு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளியில் 309 பேரும் தேர்வு எழுதவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகத்தினர்செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ