உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எம்.எல்.ஏ., அலுவலக சாவி ஒப்படைப்பு

எம்.எல்.ஏ., அலுவலக சாவி ஒப்படைப்பு

திருவாடானை, : லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ., அலுவலக சாவி ஒப்படைக்கப்பட்டது.லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறை அமுலுக்கு வந்ததால் எம்.எல்.ஏ., அலுவலகம் பூட்டப்பட்டு தேர்தல் அலுவலரின் கட்டுப்பாட்டில் இருந்தது.தற்போது ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனால் திருவாடானை எம்.எல்.ஏ., அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய தலைவர் அறையின் சாவியை சம்பந்தப்பட்டவர்களிடம் தாசில்தார் கார்த்திகேயன் ஒப்படைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை