உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் புதிய பாலத்தில் ரயில் அக்டோபரில் சோதனை ஓட்டம் ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் அக்டோபரில் சோதனை ஓட்டம் ரயில்வே வாரிய உறுப்பினர் தகவல்

ராமேஸ்வரம்:'பாம்பன் புதிய பாலத்தில், அக்டோபரில் ரயில் பெட்டி சோதனை ஓட்டம் நடக்கும்' என, ரயில்வே வாரிய உறுப்பினர் அனில்குமார் கண்டேல்வால் தெரிவித்தார்.ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடலில், 550 கோடி ரூபாயில் புதிய ரயில் பாலம் கட்டுமானம் மற்றும் ராமேஸ்வரத்தில், 120 கோடி ரூபாயில் ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு பணி நடக்கிறது. இப்பணியை நேற்று ரயில்வே வாரிய உறுப்பினர் அனில்குமார் கண்டேல்வால் ஆய்வு செய்தார். பின், அவர் கூறியதாவது: புதிய பாலம் கட்டுமான பணி இரு மாதத்தில் முடியும். அக்டோபரில் புதிய பாலத்தில் ரயில் பெட்டி சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன்பின் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவக்கப்படும். ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் சீரமைப்பு பணியும், டிசம்பரில் முடிவடைய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இன்ஜின் சோதனைஇங்கு 2.1 கி.மீ., பாம்பன் புதிய பாலத்தில், 1.6 கி.மீ.,ல் 100 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. இந்த பாலத்தில் நேற்று மண்டபம் ரயில்வே ஸ்டேஷன் இருந்து புறப்பட்ட 2.64 லட்சம் எடையுள்ள இரு ரயில் இன்ஜின்கள் மூன்று முறை சோதனை ஓட்டம் நடத்தி, புதிய பாலத்தின் உறுதி தன்மையை ரயில்வே வாரிய உறுப்பினர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

aaruthirumalai
ஜூலை 12, 2024 11:56

ரயில் வழிதடத்தை தனுஸ்கோடி வரை நீட்டிக்க வேண்டும். தனுஸ்கோடியை சிறந்த சுற்றுலாதலமாக உருவாக்க வேண்டும். மேலும் கடல் நீர்வழி பாதை ஏற்படுத்த வேண்டும். அதாவது ராமேஸ்வரம் திருச்செந்தூர் கன்னியாகுமரி வழித்தடம் உருவாக்கலாம்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை