உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை

பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை

ராமேஸ்வரம்:ஜன.15ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 2 விசைப்படகில் இருந்த 18 பேரை எல்லை தாண்டிவந்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். நேற்று மீனவர்கள் 18 பேரையும் மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். மீனவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் படகின் உரிமையாளர்கள் மார்ச் 20ல் உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. மீனவர்கள் விமானம் மூலம் சென்னை வருவார்கள் என மீன்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை