உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது

காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது

கமுதி : கமுதி--முதுகுளத்துார் சாலை பேரையூரில் சாலையில் காவிரி மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.கமுதி - முதுகுளத்துார் சாலையில் சாலையோரங்களில் ராட்சத குழாய் பதிக்கப்பட்டு பேரையூர், கருங்குளம் பாக்குவெட்டி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் பேரையூர் பஸ் ஸ்டாப் அருகே சாலையோரத்தில் காவிரி குடிநீர் குழாயில் மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.தண்ணீர் எந்த பயன்பாடின்றி கழிவுநீர் கால்வாயில் செல்கிறது. கால்வாயில் தண்ணீர் தேங்குவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. கமுதி அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. சாலையும் சேதமடைந்து வருகிறது. எனவே முதுகுளத்துார்- - கமுதி சாலையில் அவ்வப்போது காவிரி மெயின் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாவது தொடர் கதையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை