மேலும் செய்திகள்
3 ஊராட்சிகளில் கம்யூட்டர் திருட்டு
16 hour(s) ago
இன்றைய நிகழ்ச்சி: ராமநாதபுரம்,
16 hour(s) ago
கமுதியில் நாய் கூட்டம் அச்சத்தில் பொதுமக்கள்
16 hour(s) ago
10 நாட்களுக்கு பின் இன்று மீன்பிடிப்பு
16 hour(s) ago
முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே சடையனேரி பிள்ளையார் கோவில் தெருவில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.சடையனேரி கிராமத்தில் வசிக்கின்றனர் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடலாடி துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் வழங்கப்படுகிறது. சடையனேரி பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது.இந்நிலையில் தெரு சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சிரமமாக உள்ளது. எனவே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago
16 hour(s) ago