உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா

கமுதி : கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றம் நடந்தது.விழாவை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம், புண்யாகாவசனம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.முத்து மாரியம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம் பூஜை நடந்தது. பின்பு கொடி மரத்திற்கு அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது.பால்குடம், அக்கினி சட்டி எடுக்கும் பக்தர்களுக்கு காப்பு கட்டினர். மார்ச் 26ல் பொங்கல் விழா, மார்ச் 27ல் அக்கினி சட்டி, பால்குடம், பூக்குழி இறங்குதல், சேத்தாண்டி வேடம், மார்ச் 28ல் 2008 திருவிளக்கு பூஜை, மார்ச் 29ல் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிம்ம வாகன அலங்காரம் பூஜைகள் வீதிஉலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறை டிரஸ்டிகள், நிர்வாகிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி