உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மீன்பிடிப்பதற்கு தடை விதிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

மீன்பிடிப்பதற்கு தடை விதிப்பு ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் சூறாவளிக் காற்று இன்றி இயல்பு நிலையில் இருந்தும் மீன்பிடிக்க செல்ல தடை விதித்ததற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.வங்கக்கடலில் சூறாவளிக் காற்று, கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என்பதால் நேற்று ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இந்த அறிவிப்பை ஜன.5 இரவு 7:00 மணிக்கு அதிகாரிகள் வெளியிட்டதால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.நேற்று மீன்பிடிக்க செல்ல ஜன. 5 பகலில் மீன்களை பதப்படுத்த ஒருபடகில் தலா 10 ஐஸ் பார்கள், உணவு பொருள்களை மீனவர்கள் ஏற்றி வைத்தனர். இந்நிலையில் தடை விதித்தால் ஐஸ் பார்கள் கரைந்து, உணவுப் பொருள்கள் கெட்டுப் போனதால் ஒரு படகு உரிமையாளருக்கு ரூ. 1500 முதல் 2000 வரை விரையமானது.இதனால் 600 படகிற்கும் ரூ.12 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டது. மேலும் நேற்று ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளிக் காற்று, கடல் கொந்தளிப்பு இன்றி இயல்பாக இருந்தது. இச்சூழலில் தடை விதித்ததற்கு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் கூறியதாவது:சென்னையில் சூறாவளி, கடல் கொந்தளிப்பு ஏற்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்களுக்கு தடை விதித்தனர். இதனை முன்கூட்டியே தெரிவிக்காமல் போனதால் படகில் ஐஸ் பார்கள், உணவுப் பொருள்கள் வைத்ததால் பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டது.இயற்கை சீற்றத்தால் ராமேஸ்வரத்தில் பாதிப்பு இல்லை என முறையிட்டும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதது தான் மிச்சம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ