உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  பாம்பன் கடலில் கொந்தளிப்பு மீனவர் குடிசைக்குள் கடல்நீர்

 பாம்பன் கடலில் கொந்தளிப்பு மீனவர் குடிசைக்குள் கடல்நீர்

ராமேஸ்வரம்: சூறாவளியால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு நேற்று மீனவர்கள் குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்தது. நவ., 14ல் முதல் வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. மூன்றாம் நாளான நேற்றும் தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியில் சூறாவளி வீசி மழையும் பெய்தது. இதனால் பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்து கடற்கரையில் ஆக்ரோஷமாக மோதின. நேற்று அதிகாலை பாம்பன் கடல் நீர்மட்டம் உயர்ந்து தெற்குவாடி கடற்கரையில் உள்ள 10க்கும் மேற்பட்ட மீனவர்களின் குடிசைகளுக்குள் கடல்நீர் புகுந்தது. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் வீடுகளில் இருந்து குடும்பத்தினருடன் வெளியேறி மேடான பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி