| ADDED : ஜூலை 02, 2024 07:00 AM
சேலம், : உச்ச நீதிமன்றத்தில், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடித்துக் கொள்ளும் வகையில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் ஜூலை, 29 முதல், ஆக., 3 வரை நடக்கிறது.சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள அறிக்கை:உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை, மக்கள் நீதிமன்றத்தில் தீர்த்துக்கொள்ளும் வகையில், ஜூலை 29 முதல், ஆக., 3 வரை சிறப்பு மக்கள் நீதி-மன்றம் நடைபெற உள்ளது.மேற்படி நிலுவை வழக்கு களில், வழக்காடிகளுக்கிடையே சமரச பேச்சுவார்த்தைக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு உதவி எண்-044 25342441 அல்லது இலவச அழைப்பு எண்-15100 என்ற எண்களில் அழைக்கலாம்.சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடக்கும், மாவட்ட சட்-டப்பணிகள் ஆணைக்குழு அல்லது ஆத்துார், மேட்டூர், சங்ககிரி, ஓமலுார், இடைப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு உள்ளிட்ட 7 தாலுகா நீதிமன்றங்களில் செயல்படும் வட்ட சட்ட பணிகள் குழுக்களை தொடர்பு கொள்ளலாம்.பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.