உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நில அளவீடுக்கு எதிர்ப்பால் எச்சரிக்கை

நில அளவீடுக்கு எதிர்ப்பால் எச்சரிக்கை

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், மரச்சிற்ப தொழில் செய்கின்றனர். அவர்களுக்கு சிற்பக்கலைக்கூடம் அமைக்கும் பணியை தமிழக அரசு மேற்-கொள்கிறது. அதில் நாகியம்பட்டியில், தமிழக கைத்தொழில் வளர்ச்சி கழகத்துக்கு(பூம்புகார்), நில உரிமை மாற்றம் செய்வது தொடர்பாக, நில அளவீடுக்கு நேற்று, சென்னை பூம்புகார் நிறுவ-னத்தில் இருந்து வந்தனர். அளவீடு செய்தபோது, நாகியம்பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம், கெங்கவல்லி தாசில்தார் பாலகிருஷ்ணன், போலீசார் பேச்சு நடத்தினர்.தாசில்தார், 'அரசு தரிசு நிலம் என்பதால், மக்கள் எதிர்ப்பு தெரி-விக்க வேண்டாம். பணியை தடுத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்தார். இதனால் மக்கள் கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை