உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மொபட் - பைக் மோதல் வடமாநில தொழிலாளி பலி

மொபட் - பைக் மோதல் வடமாநில தொழிலாளி பலி

மகுடஞ்சாவடி : உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் மணீஷ், 26. சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் ஜரிகை போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த, 30 இரவு, 8:30 மணிக்கு இளம்பிள்ளை- - காகாபாளையம் சாலையில் ஆலங்காட்டா-னுாரில், 'பிளாட்டினா' பைக்கில் சென்றுகொண்டிருந்தார்.முன்புறம் சென்ற அரசு பஸ்சை முந்த முயன்றார். அப்போது, எதிரே வந்த, 'டியோ' மொபட் மீது மோதியதில், மணீஷ், பஸ்சில் சிக்கி சிறிது துாரம் இழுத்துச்செல்லப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார். மகுடஞ்சாவடி போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி