| ADDED : ஜூலை 30, 2024 02:54 AM
சேலம்: ஜலகண்டாபுரத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி அண்ணாமலை, 60. இவர் மனு கொடுக்க தவழ்ந்தபடி, நேற்று கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதிக்கு வந்தவர், அங்கிருந்து, நீண்ட துார-முள்ள அலுவலகத்துக்குள் செல்ல முடியாமல் மூச்சுத்திணறி, ஓரி-டத்தில் அமர்ந்து ஆசுவாசப்படுத்தி கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிக்கு வழங்கும் உதவித்தொகை, இலவச வாகனம் கேட்டு பலமுறை மனு கொடுத்துள்ளேன். கைகளை ஊன்றியபடி, அலைந்த கார-ணத்தால், கைகள் முழுவதும் காயம் ஏற்பட்டுள்ளது. மகன் துன்பு-றுத்தும் நிலையில், உதவித்தொகை கிடைக்காமல் வேதனை-யோடு வாழ்ந்து வருகிறேன். மோட்டார் பொருத்திய மூன்று சக்-கர வாகனம் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.