உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முறைகேடாக மாத்திரை விற்ற பார்மசிஸ்ட் கைது

முறைகேடாக மாத்திரை விற்ற பார்மசிஸ்ட் கைது

சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையில், வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி போதைக்கு, ஊசி மூலம் உடலில் செலுத்துவதாக புகார் வந்தது. இதனால் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்து, அஸ்-தம்பட்டியை சேர்ந்த ரமேஷ் உள்பட, 6 பேரை கைது செய்தனர். ரமேஷிடம் விசாரித்தபோது கோவையில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி விற்றது தெரிந்தது. அவருக்கு மாத்திரை விற்றவரை பிடிக்க தனிப்படை போலீசார் கோவையில் முகா-மிட்டு தேடி வந்தனர்.இந்நிலையில், கோவை, சிங்காநல்லுார், உப்பிலிபாளையத்தை சேர்ந்த, பார்மசிஸ்ட் செல்வராஜ், 47, என்பவர், மருந்து கம்பெ-னியில் இருந்து வலி நிவாரண மாத்திரைகளை அனுமதியின்றி வாங்கி சேலம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்றது தெரிந்-தது. நேற்று, அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை