| ADDED : ஜூன் 14, 2024 01:21 AM
தாரமங்கலம், தாரமங்கலம், தெசவிளக்கு ஊராட்சியில் கழிவுநீர் வடிகால் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அணைமேடு, பள்ளிகொண்டான்பாறை, லட்சுமாயூர், மாட்டையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் அமைக்க, மாநில நிதிக்குழு மானியத்தில், 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அணைமேட்டில் அரசு இடத்தை ஆக்கிரமித்து சிலர் கடை, கழிப்பறைகளை கட்டியிருந்தனர். இதனால் இடத்தை அளக்க, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று தாரமங்கலம் போலீஸ் பாதுகாப்புடன், ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார் தலைமையில் வருவாய்த்துறையினர், இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றினர்