உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / நாளை தொடங்கி 24 வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

நாளை தொடங்கி 24 வரை 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சேலம்:சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி அறிக்கை:வார இறுதி நாள், வரும், 23ல் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில், 400 சிறப்பு பஸ்கள், ஏப்., 20(நாளை) முதல், 24 வரை இயக்கப்பட உள்ளன. சேலம் புறநகர், ஆத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இதுதவிர, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் முன்பதிவு மற்றும் இணையம் வழியாக பதிவு செய்யப்பட்டு சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூர்; சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, பெங்களூரு, சிதம்பரம், காஞ்சிபுரம்; ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், புதுச்சேரி, கடலுார்; நாமக்கல்லில் இருந்து சென்னை; திருச்சியில் இருந்து ஓசூர்; பெங்களூருவில் இருந்து சேலம், திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு; ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சேலம் புறநகர், தர்மபுரி, ஓசூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி