உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போலி மருத்துவர் கைது

போலி மருத்துவர் கைது

சேலம்: சங்ககிரி, கனககிரி கிராமம் செட்டியார்காட்டை சேர்ந்தவர் பால-கிருஷ்ணன், 42. சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் இயற்கை மருத்துவம் முடித்துள்ளார். இவர், சேலம் மாவட்டம் வேம்படிதாளம் பிரிவு சாலையில் உள்ள கிளினிக்கில், மருத்துவர் கனகராஜ் என்பவரிடம் உதவியாளராக பணிபுரிந்தார். 4 ஆண்டுக-ளுக்கு முன் கனகராஜ் உடல்நலக்குறைவால் இறந்த நிலையில் அதே கிளினிக்கில் பாலகிருஷ்ணன் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். இதுகுறித்து நைனாம்பட்டி மருத்துவர் மோனிகா குறிஞ்சி புகார்படி, கொண்டலாம்பட்டி போலீசார், பாலகிருஷ்-ணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை