உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மலைக்கிராமத்தில் அரசு பஸ்சில் தீ

மலைக்கிராமத்தில் அரசு பஸ்சில் தீ

ஏற்காடு: ஏற்காடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, பட்டிப்பாடி வழியே வேலுார் மலைக்கிராமத்துக்கு அரசு பஸ் நேற்று புறப்பட்டது. பின் அங்கி-ருந்து மீண்டும், ஏற்காடு நோக்கி புறப்பட்டது. டிரைவர் சரவண-குமார் ஓட்டினார். மதியம், 1:15 மணிக்கு, கடுக்காமரம் அருகே வந்தபோது பஸ்சின், 'பானட்' பகுதியில் புகை வந்தது. சரவண-குமார் பஸ்சை நிறுத்தி பயணியரை இறக்கி விட்டு பானட்டை திறந்து பார்த்தார். அப்போது ஒயர் தீப்பிடித்து எரிந்தது. உடனே சரவணகுமார், கண்டக்டர் சண்முகநாதன் ஆகியோர், பேட்டரி இணைப்பை துண்டித்துவிட்டு, நெருப்பை அணைத்தனர். இதனால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை