உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் சிறைக்கைதி சாவு; உறவினர்கள் மறியல் முயற்சி

சேலத்தில் சிறைக்கைதி சாவு; உறவினர்கள் மறியல் முயற்சி

சேலம்: சேலம், ஜாகீர் சின்னம்மாபாளையத்தை சேர்ந்தவர் தீனதயாளன், 31; இவர் மீது, 13 வழக்குகள் உள்ளன. இவரை, 2021 ஜூலையில் வழிப்பறி வழக்கில், சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் ஐந்தாண்டு சிறை தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று காலை அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி