ரயில்வே ஸ்டேஷனில் டாக்சி டிரைவர்கள் மோதல்
சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பயணியரை அழைத்துச்-செல்வதில், 'கார்ப்பரேட் டாக்சி' டிரைவர்களுக்கும், உள்ளூர், 'டாக்சி' டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்போக்கு நிலவுகிறது. நேற்று காலை, இரு தரப்பு டிரைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறைந்த வாடகை என கூறி அழைத்-துச்சென்று, அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டி தக-ராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், ரவி என்-பவர் காயமடைந்தார். அங்கு பதற்றம் உருவாக, விரைந்து சென்ற சூரமங்கலம் போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்-தினர். ரவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இரு தரப்பினரி-டமும் விசாரணை நடக்கிறது.