| ADDED : ஜன 03, 2026 07:30 AM
சேலம்: மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் ஆலயங்-களில், ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், நேற்று நள்ளிரவு ஆருத்ரா விழா தொடங்கியது.நடராஜர் மூர்த்தி, சிவகாமி அம்பாளுக்கு, பல்வேறு வாசனை திர-வியங்களால் சிறப்பு அபி ேஷகம் நடத்தப்பட்டது. இன்று காலை சுகவனேஸ்வரர், ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு, தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. தொடர்ந்து திருவீதி உலா நடக்கிறது.அதேபோல் தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் திருக்கல்-யாண உற்சவம் நேற்று நடந்தது. அம்பாள் சன்னதி முன், பூக்கள் அலங்காரத்தில் சோமாஸ்கந்தர், சிவகாமசுந்தரி அம்பாள் காட்சிய-ளித்தனர்.தொடர்ந்து மணக்கோலத்தில் இருந்த சுவாமியை, ஏராமான பெண்கள் வழிபட்டனர். இரவு, 9:00 மணிக்கு, யாகவேள்வி செய்து, சோமாஸ்கந்தருக்கு கிரிஜாம்பாளுடன் திருக்கல்யாண வைபவம் நடந்து, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்-தர்கள் தரிசித்தனர். இன்று காலை, 10:00 மணிக்கு, நடராஜர், அம்பாள் சிவகாமசுந்தரிக்கு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்கா-ரத்தில் தீபாராதனை நடக்கிறது. மாலை திருவீதி உலாவில், ஊடல் கூடல் வைபவம் நடக்கிறது.