உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / முன்னாள் எம்.எல்.ஏ.,க்கு பாராட்டு விழா

முன்னாள் எம்.எல்.ஏ.,க்கு பாராட்டு விழா

சிவகங்கை : முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரனுக்கு சிவகங்கையில் ஜூன் 29ல் பாராட்டு விழா நடத்த விழாக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். சிவகங்கையில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு விழாக்குழு தலைவர் வழக்கறிஞர் எம்.மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் முன்னிலை வகித்தார். செயலாளர் பொறியாளர் பாரதிதாசன்,பொருளாளர் பொறியாளர் சுந்தரமாணிக்கம், விழாக்குழு உறுப்பினர்கள்இளங்கோவன், பாலு, முத்துப்பாண்டி,ஜவஹர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் கூறியதாவது: முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரன் 85ம் ஆண்டு பிறந்த நாள், 70 ஆண்டு பொது வாழ்வு பாராட்டு விழா சிவகங்கையில் ஜூன் 29 அன்று நடக்கிறது. அன்று கோலப்போட்டி, மாட்டுவண்டி பந்தயம், இலவச மருத்துவ முகாம், அன்னதானம் நடக்கிறது. மாலை 6:00 மணிமுதல் சண்முகராஜா கலையரங்கில் பாராட்டு விழா, நாட்டுப்புற கலைவிழா, இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். விழாக்குழு தலைவர் வழக்கறிஞர் எம்.மோகனசுந்தரம் தலைமை வகிக்கிறார். முன்னாள் (ஓய்வு) ஐ.ஏ.எஸ்., ஆர். கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்கிறார். வேலம்மாள் கல்வி குழும தலைவர் முத்துராமலிங்கம் துவக்கி வைக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அமைச்சர்கள் பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், எம்.பி.,க்கள் கார்த்தி, மாணிக்தாகூர், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் அமைச்சர்கள் உட்பட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுநல அமைப்பினர் பங்கேற்கின்றனர். பாராட்டு விழா மலரை குன்றக்குடி பொன்னம்பல அடிகள், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் லுார்துஆனந்தம், சிவகங்கை ஜமாத் தலைவர் எம்.காஜாமைதீன் வெளியிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ