உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மேலநெட்டூர் பள்ளி அருகில் சேதமடைந்த மின் கம்பம்

மேலநெட்டூர் பள்ளி அருகில் சேதமடைந்த மின் கம்பம்

மானாமதுரை : மேல நெட்டூரில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.தேரோடும் வீதியில் அரசு பள்ளி மற்றும் சமையலறை கூடத்திற்கு அருகில் உள்ள மின் கம்பம் மிகவும் சேதமடைந்த நிலையில் சிமென்ட் பூச்சு கீழே உதிர்ந்து அதில் உள்ள கம்பிகளும் துருப்பிடித்து வெளியே தெரிகிறது.எப்போது ஒடிந்து விழுமோ என்ற நிலையில் உள்ளதால் மாணவர்கள் அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர்.அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விபத்து ஏற்படும் முன் அந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை