உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நார்த்தாமலை கோயில் திருவிழா பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

நார்த்தாமலை கோயில் திருவிழா பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன்

காரைக்குடி: காரைக்குடி முத்துராமலிங்கத் தேவர் நகரில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழா கடந்த ஜூலை 23 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. முக்கிய நிகழ்வாக நேற்று காலை, முளைப்பாரி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், முத்தாலம்மன் கோயிலில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்தும் அலகுகுத்தியும் பறவை காவடி எடுத்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். தொடர்ந்து கோயில் முன்பு, பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ