உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டூவீலர் மீது கார் மோதல் ஒருவர் பலி; இருவர் காயம்

டூவீலர் மீது கார் மோதல் ஒருவர் பலி; இருவர் காயம்

நாச்சியாபுரம்: திருப்புத்துார் அருகே டூ வீலர் மீது கார் மோதியதில் டூவீலரில் சென்றவர் பலியானார். உடன் சென்ற 2 பேர் காயமடைந்தனர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் ராஜா மகன் செந்தில் குமார்34. கல்லல் ஒன்றியம் ஆலங்குடி உணவகத்தில் வேலை செய்கிறார்.நேற்று முன்தினம் இரவு பட்டமங்கலம் கோயில் விழாவிற்கு உடன் பணியாற்றும் விநாயகமூர்த்தி மனைவி வள்ளிக்கண்ணு31, மகன் ஜஸ்வந்த்7, ஆகியோரை அழைத்துச் சென்றார். இரவு 9:00 மணிக்கு ஆவந்திப்பட்டி விலக்கு பகுதியில் செல்லும் போது கல்லலிருந்து காரைக்குடி வந்த கார் டூ வீலர் மீது மோதியது.இதில் செந்தில்குமார் இறந்தார். வள்ளிக்கண்ணு மற்றும் ஜஸ்வந்த் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். நாச்சியாபுரம் போலீசார் விசாரணை செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ