உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாவட்டத்தில் தொடர் கொள்ளை

மாவட்டத்தில் தொடர் கொள்ளை

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து கொள்ளை, வழிப்பறி, வங்கி கொள்ளை முயற்சி நடந்து வருகிறது குற்றவாளிகளை பிடிப்பதில் போலீசார் திணறி வருகின்றனர்.சிவகங்கை அருகே மதகுபட்டியில் நகை அடகு கடையில் கடந்த 8ம் தேதி இரவு மர்ம நபர்கள் கடையின் பின்புறம் சுவரில்துளையிட்டு கடைக்குள் நுழைந்து லாக்கரை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றனர். கடந்த மாதம் 20ம் தேதி இரவு சிவகங்கை அருகே கீழக்கண்டனி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் மர்ம நபர்கள் சிசிடிவி கேமரா வயர்களை துண்டித்து விட்டு கதவை உடைக்க முயற்சித்தனர். அப்போது எச்சரிக்கை மணி ஒலித்தால் மர்ம நபர்கள் தப்பினர். இது வரை இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவில்லை.இதேபோல் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே நெடுவத்தாவு கிராமத்தை சேர்ந்தவர்பிச்சை மனைவி லட்சுமி 60. இவர் ஜூன் 8ம் தேதி நெடுவத்தாவு கிராமத்தில் உள்ள பொது குளியல் தொட்டிக்கு பேத்தியுடன் சென்றார். அப்போது டூவீலரில் வந்த இரண்டு பேர் லட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர்.காரைக்குடி செஞ்சை பழனிச்சாமி வீதியைச் சேர்ந்தவர் முகமதுரபீக் 36. இவர் மெ.மெ.வீதியில் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அந்தவழியாக டூவீலரில் வந்த 2 பேர் அலைபேசியை பறித்து சென்றனர். காரைக்குடியில் வியாழக்கிழமை சந்தை வீதியில் பீகாரை சேர்ந்த கட்டத் தொழிலாளி மனு 19 கடையில் பொருட்களை வாங்கிக்கொண்டு நடந்துசென்றார். டூவீலரில்வந்த 4 பேர் மனுவை மிரட்டி அலைபேசியை பறித்து சென்றனர். சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து வழிப்பறி, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குற்றங்களை தடுக்க மாவட்டத்தில் உள்ள முக்கிய நகர் வீதிகளில் சிசிடிவி கேமரா பொறுத்துவதற்கு எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை