உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் பெயர் நீக்கம் அதிகம் 

சிவகங்கையில் பெயர் நீக்கம் அதிகம் 

சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம், முறையாக பூத் சிலிப் வழங்காதது, வாக்காளர் விழிப்புணர்வு வழங்காதது போன்ற காரணத்தால் கடந்த 3 தேர்தலில் தொடர்ந்து ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து கொண்டே செல்கிறது.இத்தொகுதியில் சிவகங்கை, காரைக்குடி, திருப்புத்துார், மானாமதுரை (தனி), ஆலங்குடி, திருமயம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 தேர்தலில் 14 லட்சத்து 12 ஆயிரத்து 373 வாக்காளர்களில், 10 லட்சத்து 18 ஆயிரத்து 994 பேர் ஓட்டளித்ததில், 72.75 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. 2019 தேர்தலில் 15 லட்சத்து 52 ஆயிரத்து 19 வாக்காளர்களில், 10லட்சத்து 81 ஆயிரத்து 167 பேர் 69.90 சதவீதம் ஓட்டளித்தனர். 2024 தேர்தலில் 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்களில், 10 லட்சத்து 49 ஆயிரத்து 675 பேர் 64.25 சதவீத ஓட்டளித்துள்ளனர். இத்தொகுதியில் கடந்த 3 முறை நடந்த தேர்தலிலும் தொடர்ந்து ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 2014 ல் 72.75 சதவீதத்தில் இருந்து, 2019 ல் 2.85 சதவீதம் குறைந்து, அத்தேர்தலில் 69.90 சதவீதம் பதிவானது. 2024 தேர்தலில் 5.65 சதவீதம் குறைந்து, 64.25 சதவீதமாக பதிவாகியுள்ளது.

வா க்காளர் நீக்கத்தால் அதிர்ச்சி

இத்தொகுதியில் ஓட்டுப்பதிவு குறைந்து கொண்டே வருவதால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற அதிருப்தி காரணமாகவும், மாவட்ட அளவில் சரியாக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்காதது, முறையாக பூத் சிலிப் வழங்காதது. மேலும் அனைத்து வேட்பாளர்களும் தொகுதி முழுவதும் பிரசாரத்திற்கு செல்லாதது, குறிப்பாக ஒரு ஓட்டுச்சாவடிக்கு 10 முதல் 30 வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கியது போன்ற காரணங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற காரணத்தால் ஓட்டுப்பதிவு கடுமையாக குறைந்துவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஏப் 21, 2024 10:45

முதலில் சென்னை மாங்காரத்தைவிட சிவகங்கை நல்லமுறையில் வாக்கு பதிவு மிக அமைதியாக நடைபெற்றது தேர்தல் அதிகாரிகள் அனைவருக்கும் மிகுந்த நன்றியினை சொல்லிக்கொள்ளவேண்டும் வாக்கு எண்ணிக்கை குறைபாடு பல காரணிகளை கொண்டது சூரியனின் தாக்கம் மிக அதிகம் இன்றைய தலைமுறையினர் வாக்களிக்க தயக்கம் இன்னும் கிராமங்களில் அனைத்து மக்களும் திருவிழா ஓல் வாக்களித்தனர் நகரத்தில் குறைந்தது ஒரே தீர்வு ஆதார் என்னை வாக்குச்சாவடியில் இணைத்து, வாக்களிக்கத்தவர்களுக்கு ரேஷன் அரிசி, சர்க்கரை இல்லை என உத்திராவிடவேண்டும் பின்னர் பாருங்கள் சுமைக்கு நுறு சதவீதம் வாக்கு பதிவாகலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை