உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை நகர் மதுரை ரோடு பகுதியைச் சேர்ந்தவர் அயூப் கான் 63. இவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் சிவகங்கை நகர் பகுதியில் வசிக்கும் அக்பர் அலி, அருண்குமார், மதிவாணன், ஈஸ்வரன், மணிகண்டன் உள்ளிட்டவரிடம் வெளிநாடு அனுப்புவதாக கூறி ரூபாய் 10 லட்சம் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து அவர்கள் சிவகங்கை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் அயூப் கானை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ