உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் நாளை மயூர வாகன சேவன விழா

மானாமதுரையில் நாளை மயூர வாகன சேவன விழா

மானாமதுரை : மானாமதுரை அலங்காரகுளம் அருகே அமைந்துள்ள மயூரநாதன் பாம்பன் குமரகுருதாச சுவாமி கோவிலில் நாளை மயூர வாகன சேவன விழா நடைபெற உள்ளது.காலை 6:00 மணிக்கு பாம்பன் குமரகுருதாச சுவாமி பாடல் பாராயணமும்,6:30 மணிக்கு வஜ்ராயுதத்திற்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும்,இரவு 7:00 மணிக்கு சுவாமி புஷ்ப பல்லக்கில் கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். ஏற்பாடுகளை பாம்பன் சுவாமி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை