உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சேதமான பெயர் பலகைகளால் வெளியூர் பயணிகள் குழப்பம்

சேதமான பெயர் பலகைகளால் வெளியூர் பயணிகள் குழப்பம்

காரைக்குடி : காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், ஊர் பெயர்ப் பலகைகள் மற்றும் வழிகாட்டிகள் சேதமடைந்தும் பெயர்கள் அழிந்தும் கிடப்பதால் பயணிகள் குழப்பமடைந்து வருகின்றனர்.காரைக்குடி மற்றும் சாக்கோட்டை, கல்ல் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள். அந்தந்த ஊர்களின் பெயர்களை அறிந்து கொள்ளும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர் எல்லையில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதே போல மூன்று மற்றும் நான்கு கிராமங்கள் செல்லும் சாலை சந்திப்புகளில் வழிகாட்டியும் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளியூர் பயணிகள் அந்தந்த கிராமங்களை எளிதில் சென்றடைய முடியும். ஆனால் தற்போது பல கிராமங்களில் ஊர் பெயர்ப் பலகைகள் மற்றும் வழிகாட்யும் முற்றிலுமாக அழிந்தும் சேதமடைந்து கிடைக்கிறது. பெரும்பாலும் மதிய மற்றும் இரவு வேலைகளில் கிராம மக்கள் ஊர் எல்லையில் இருப்பதில்லை. இதனால் இரவு மற்றும் மதிய வேலைகளில் கிராமங்களுக்கு செல்லும் வெளியூர் பயணிகள் ஊர் பெயர் தெரியாமல் திணறி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கிராம பெயர்ப் பலகை மற்றும் வழிகாட்டி பலகைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை எழுந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்