| ADDED : ஜூலை 04, 2024 01:55 AM
தேனி: 'கிராமிய தபால்துறை காப்பீட்டில் நேரடி முகவராக செயல்பட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.' என, தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை : 18 வயதிற்கு மேற்பட்ட 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை இல்லாதோர், சுய தொழில் புரிவோர், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி ஊழியர், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், கல்லுாரி மாணவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நேரடி முகவராக தேர்ந்தெடுக்கப்படுவோர் செயல்படுத்தும் வணிகத்திற்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுவோர் ரூ.5 ஆயிரம் மதிப்புடைய என்.எஸ்.சி., அல்லது கே.வி.பி., சேமிப்புப் பத்திரக் கணக்கினை தபால் அலுவலகங்களில் தங்கள் பெயரில் தொடங்கி President of India பெயரில் பத்திரம் பெற்று ஒப்படைக்க வேண்டும். தங்கள் உரிமம் முடியும் போது பத்திரம் திருப்பித் தரப்படும். தகுதியுள்ளவர்கள் விண்ணப்பங்களை தங்கள் அருகில் உள்ள தலைமை, துணை தபால் அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்து, தபால்துறை கோட்டக் கண்காணிப்பாளர், தேனி கோட்டம், தேனி - 625531 என்ற முகவரிக்கு ஜூலை 9க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.விண்ணப்பதாரர்களுக்கு ஜூலை 10ல் காலை 11:00 மணிக்கு தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்க உள்ள நேர்காணலில் தேவையான சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு தபால்துறை வளர்ச்சி அலுவலரின் 99768 21104 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.