உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பகவதியம்மன் கோயில் சித்திரை திருவிழா பக்தர்கள் திரளாக பங்கேற்பு

பகவதியம்மன் கோயில் சித்திரை திருவிழா பக்தர்கள் திரளாக பங்கேற்பு

உத்தமபாளையம்: உத்தமபாளையம் பகவதியம்மன் கோயில் சித்திரை திருவிழா கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவில் சக்தி கரகம் முல்லைப் பெரியாற்றில் கரைக்கப்பட்டது.உத்தமபாளையம் வடக்குத் தெருவில் உள்ள பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாத இறுதியில் விழா துவங்கி சித்திரையில் சக்தி கரகம் எடுப்பது வழக்கம். பிற கோயில்களில் சக்தி கரகம் எடுத்தாலும், இது சற்று விசேஷமானது. இக் கரகம் அதீத சக்தி கொண்டது. இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல் ஒன்றில் ஊர் மெச்சும் உத்தமபாளையம் கரகம் என்று இந்த கோயில் கரகத்தை சுட்டிக்காட்டி பாடியிருப்பார்.கடந்த ஏப்ரல். 9 ல் இருந்து தினமும் ஒரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்தினர். ஏப்.16 ல் காளாத்தீஸ்வரர் கோயில் முன்பாக முல்லைப்பெரியாற்றில் நள்ளிரவு 12 மணியளவில் சக்தி கரகம் எடுக்கப்பட்டு ஊரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து கோயிலை அடைந்தது. முன்னதாக அக்னி சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல நேர்த்திகடன்கள் பக்தர்களால் நிறைவேற்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு சக்தி கரகம் கோயிலில் இருந்து கிளம்பி நகர்வலம் வந்தது. எட்டு இடங்களில் காவு கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து நள்ளிரவு 2 மணியளவில் சக்தி கரகம் முல்லைப்பெரியாற்றில் கரைக்கப்பட்டது , முன்னதாக நூற்றுக்கணக்கில் பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை